எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
உலக அளவில் சினிமாவில் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடக்கும் இந்த விழாவில் உலக நாடுகளில் இருந்து பல படங்கள் அனுப்பப்படுகின்றன. அந்தவகையில் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் குஜராத்தி படமான ‛செல்லோ ஷோ' தேர்வாகி உள்ளது.
பேன் நலின் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் 9வயது சிறுவனை மையமாக வைத்து உருவாகி உள்ளது. யதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ள இந்த படம் ஏற்கனவே சில சர்வதேச பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது. தற்போது ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படுகிறது.
ஆஸ்கருக்கு அனுப்ப இந்தியாவின் பல மொழிகளில் இருந்து படங்கள் தேர்வாகின. குறிப்பாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், விவேக் அக்னி ஹோத்ரியின் காஷ்மீர் பைல்ஸ் படங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தன. இறுதியில் ‛செல்லோ ஷோ' தேர்வானது.