ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
உலக அளவில் சினிமாவில் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடக்கும் இந்த விழாவில் உலக நாடுகளில் இருந்து பல படங்கள் அனுப்பப்படுகின்றன. அந்தவகையில் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் குஜராத்தி படமான ‛செல்லோ ஷோ' தேர்வாகி உள்ளது.
பேன் நலின் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் 9வயது சிறுவனை மையமாக வைத்து உருவாகி உள்ளது. யதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ள இந்த படம் ஏற்கனவே சில சர்வதேச பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது. தற்போது ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படுகிறது.
ஆஸ்கருக்கு அனுப்ப இந்தியாவின் பல மொழிகளில் இருந்து படங்கள் தேர்வாகின. குறிப்பாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், விவேக் அக்னி ஹோத்ரியின் காஷ்மீர் பைல்ஸ் படங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தன. இறுதியில் ‛செல்லோ ஷோ' தேர்வானது.